
அதாவது தேர்தலில் வெற்றி தோல்வி சரிசமாகக் காணப்படுவதால், இலங்கையில் இருக்கும் பல கோடி ரூபா கறுப்புப் பணத்தை ராஜபக்ஷ குடும்பத்தினரும், அவர்கள் உறவினர்கள் மற்றும் தொழில் நண்பர்கள் அனைவரும் அப்புறப்படுத்த இருப்பதாக அதிர்வு இணையத்திற்கு செய்திகள் கசிந்துள்ளது. மக்களிடம் கொள்ளையிட்டும், கோத்தபாயவினால் பல தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டும் பெறப்பட்ட பல மில்லியன் ரூபாக்களை அப்புறப்படுத்தும் நோக்கிலேயே இலங்கை வங்கி மூலமாக இவ்வாறு ஒரு ஏற்பாடு நடந்து வருவதாக விடையம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜபக்ஷவினர் மற்றும் அவர்களது வர்த்தக நண்பர்கள் மக்களிடம் கொள்ளையிட்ட பணத்தொகையை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாக முன்னர் நாட்டிலிருந்து வெளியில் எடுத்துச் செல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் இதற்கெதிராக நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் தெரிவித்துள்ளார்.
நன்றி: அதிர்வு
0 Responses to கறுப்புப் பணத்தை வெளியேற்ற ராஜபக்ஷ புதிய திட்டம் அம்பலம்