Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகா பாரதமே! நீ இந்த மகா பாதகத்தைச் செய்தது தான் ஏனோ? இந்தியா - பெரிய தேசம்; சிறிய இதயம் :

உயர்ந்த கோயிற் கோபுரங்கள், தாழ்ந்த உள்ளங்கள்! காந்தி தேசம், கருணையற்ற இராஜாங்கம்!! அன்னை இந்திரா தேசமே!!! இது தான் உன் தாய்மையா? ! பாரத மாதாவே!!!

உன் மைந்தர்கள் இராஜதந்திரிகளா? இல்லை இராட்சதர்களா? - ஒரு கொலைக் குற்றவாளிக்குக் கூட சிகிச்சை அளிப்பது தான் தர்மம்.

வந்து தங்கிப் போக இது தர்மசாலை இல்லை என்கிறார் சுவாமி.

ஆம், இந்த நாராயண சிவசங்கர் சுவாமிகள் தான் முள்ளிவாய்க்காலில் நர மாமிசத்தை உண்டு, தமிழ் மக்களின் இரத்தத்தையும் குடித்தனரா?

இந்த அன்னை பிரபாகரனைப் பெற்றது தான் குற்றமா? அவரைத்தான் கொன்று விட்டோம் என்கிறீர்களே! அப்படியானால் இன்னுமேன் அச்சம்?

கிறிஸ்தவர்களிற்கு ஜெருசலெம் மீது ஒரு பக்தி! இஸ்லாமியர்களிற்கு மக்கா மீது ஒரு மதிப்பு!! ஈழ இந்துக்களிற்கு இந்தியா மீது ஒரு அபிமானம்!!!

ஏகபத்தினி விரதனின் இராமேஸ்வரமும், சிவசக்திபார்வதிக்கயிலையும், திரிபுரசுந்தரி சீர்காழியும், நான்மறைக் கூடல் மதுரை மீனாட்சியும், ஐங்கரனின் அருள்மிகு ஆலயங்களும், ஆறுமுகத்தானின் ஏழு படை வீடுகளும், அட்ட பாலகரின் அணையாத தீபங்களும், எட்டுத் திக்கும் ஒலிக்கும் ஆலய மணிகளும்,

நவக்கிரகங்களிற்கும் கோவில் கொண்ட மகா பாரதமே! நீ இந்த மகா பாதகத்தைச் செய்ததது தான் ஏனோ?

இப்போது புரிகிறது நீ சிறீலங்கா நமோ நமோ தாயிலும் கொடியவள் என்று. அன்று அவள் விடுவித்தாள் இன்று நீ துரத்துகிறாயா?

ஆம் சிங்களம் பங்காளிப் பகையாளி இந்தியா தான் நிஜமான நிரந்தரப் பகையாளியா?

நிரூபன் சென் சொன்னார் பருத்தித்துறையில் நின்று அன்று இராம கிருஷ்ணரும், விவேகானந்தரும், காந்தியும், நேதாஜியும் பகவத்சிங்கும் பிறந்த மண் பாரத மண் என்று.

எங்கள் நேதாஜி பிரபாகரன் தான். காந்தி தேசத்தால் ஒழிந்த தலைவன் தான் தமிழ்ப் பகவத்சிங்.

சிறீலங்காவில் ஒரு சிங்கள ஒன்லி இந்து சமுத்திரத்தில் இந்தியா ஒன்லிப் பொலிசியா? ராஜீவ் காந்தியைப் பார்த்து ஜே ஆர் சொன்னார் நீ ஆசியாவின் பொலிஸ்காரனாய் இரு என்று.

நீ இராட்சதியாய் மாறியது எப்போது? காஞ்சியும் திருப்பதியும் பழனியும் இன்னுமாக எத்தனையோ திருத்தலங்களும், புண்ணிய நதிகளும் இமயமாய் உயர்ந்த பல்வேறு மலைக் கோயில்களும்

தரிசிக்க மட்டுந் தானா? இவைகள் எல்லாம் வெறும் கல்லும் மண்ணுமாகியது எப்போது? சிறிய ஈழம் வளரந்திருந்த போராட்டம், பெரிய இந்தியா சிறிய இதயம்.

சிறிய பிரதேசம், அதிக பிணங்கள் ஆறு முன்னே அடுத்த காயம்

முடிவாக இந்தியா இனி நமக்கு நீ மகா பாரதம் அல்ல! மகா பாதகம்.

0 Responses to இந்தியா இனி நமக்கு நீ மகா பாரதம் அல்ல! மகா பாதகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com