அன்பான தமிழீழ-தமிழக மக்களே!எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடைநீக்கிகளாகச் செயற்பட்ட கரும்புலிகளை நினைவுகூரும் நாள் நெருங்கிக் கொண் டிருக்கிறது. அளவற்ற தியாகங்களைப் புரிந்து வளர்ந்த எமது விடுதலைப் போராட்டத்தில் தரை,கடல்,வான்,கரும்புலிகள் ஆற்றிய பங்கு அளப்பரியது.
யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அற்புதமான தியாகங் களையும் சாதனைகளையும் இவர்கள் படைத்தார்கள்.
எமது போராட்டம் தேக்கமுற்ற நேரங்களிலெல்லாம் இந்த நெருப்பு மனிதர்கள் தடைகளைத் தகர்த்து எமது போராட்டத்தை வளர்த்தார்கள்.
காற்றுப்புக முடியாத இடங்களுக்குள் கரும்புலிகள் புகுந்து ஏதிரியை அழித்தார்கள். தமது சுயத்தை அழித்து எமது இனத்தின் விடுதலைக் காகத் தமது உயிரையே காணிக்கையாக்கிய அந்த அற்புத
மனிதர்களின் தியாகத்தை வேறு எவராலும் ஈடுகட்ட முடியாது.
“எமது இனத் தின் தற்காப்புக் கவசங்களாகவே நான் கரும் புலிகளை உருவாக்கினேன்” என்ற எமது தேசியத் தலைவரின் கூற்றுக்கு அமைவாக அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.
எதிர்வரும் யூலை ஐந்தாம் நாள் இந்த உன்னத மனிதர்களை நினைவுகூரும் ‘கரும்புலிகள் நாள் 2010″
தழிழினத்தின் தேசியக் குரலான புலிகளின் குரல் யூலை 5ம் நாள் கரும்புலிகள் நாளுக்குரிய சிறப்பு ஒலிபரப்பினை உலகம் முழுவதும் ஒலிபரப்ப திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
அன்பான தமிழ்மக்களே…
கரும்புலிகள் பற்றிய சிறப்பு ஆக்கங்கள். கவிதை, சிறுகதை, நாடகம் உட்பட வானொலியில் ஒலிபரப்ப ஏற்றவாறு எவ்வகையான கலைப்படைப்பையும் நீங்கள் எழுதி அனுப்பலாம்.
எதிர்வரும் யூலை மூன்றாம் நாளுக்கு முன்பாக உங்கள் ஆக்கங்கள் புலிகளின் குரல் நிறுவனத்துக்குக் கிடைக்கத்தக்க வகையில்
அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கலைப்படைப்புக்களை அனுப்ப: info@pulikalinkural.com
நன்றி.
புலிகளின் குரல் நிறுவனம்.
23-06-2010



0 Responses to யூலை 5 கரும்புலிகள் நாளுக்குரிய சிறப்பு ஒலிபரப்பு: புலிகளின் குரல்