Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதிப்போரில் பங்குபற்றிய இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றை சேர்ந்த ஒன்பதினாயிரம் படையினர் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள சிறிலங்காவின் போர்வெற்றி விழா கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளனர் என்று சிறிலங்கா இராணுவத்தின் ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 18 ஆம் திகதி நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த போர்வெற்றிவிழா கொண்டாட்டங்கள் கடுமையான காலநிலையால் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

தற்போது இரண்டாவது தடவையாக கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெற்றிவிழா கொண்டாட்டங்களில் சுமார் 9 ஆயிரம் படையினர் கலந்துகொள்வர் என்றும் -

இவர்கள் அனைவரும் வழமையான அணிவகுப்பு வரிசையில் நகர மாட்டார்கள் என்றும் இறுதிப்போரின்போது களத்தில் தமது நகர்வுகளை மேற்கொண்டதுபோன்று நிகழ்வில் மாதிரி நகர்வினை மேற்கொண்டு காண்பிப்பர் என்றும் ஊடகப்பேச்சார் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் இந்த வெற்றிவிழா நிகழ்வுகள் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

0 Responses to வன்னிப்போரில் பங்குகொண்ட 9 ஆயிரம் படையினர் வெற்றிவிழா கொண்டாட்டங்களில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com