Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை போரின் இறுதிக் கட்டத்தில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களும் அப்பாவித் தமிழர்கள் ஈவு இறக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டதும். சரணடைய வந்த விடுதலைப்புலிகளைக் கொன்று குவித்ததும் உலமறிந்த உண்மை சிங்கள அரசு போர் குற்றங்களே நடக்கவில்லையென மறுத்தபோதும். .நா அமைப்பு சிறீலங்கா அரசு போர் தொடர்பான குற்றங்களை புரிந்த மனித உரிமைகளை மீறியதற்க்கான ஆதாரங்களைத் திரட்ட கடந்த வராம் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

இலங்கை வன்னியில் போர் நடந்து ஓரு வருடத்துக்கு மேலான போதிலும், தடயங்களையும் ஆதரங்களையும் திரட்ட அமைக்கப்பட்ட இந்த மூவர் கொண்ட குழு வரவேற்புக்குறியது.

.நா வின் இந்த முயற்சி உலகத் தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும் என மலேசியத் தமிழர்கள் தெரிவித்தாக மலேசிய உலகவிவகார மாமன்றத்தின் தலைவர் ஈஸ்வரலிங்கம் தெரிவித்தார்.

இக் குழு யாருடைய வற்புறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் இடம் கொடுக்காமல் சுகந்திரமாக செயல்ப்பட்டு ஆதாரங்களைத் திரட்டி அறிக்கை சமர்ப்பித்து உலகச் சமுகத்திற்கு உண்மைகளை அறிவிக்க வேண்டும் என .நாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் ஈஸ்வரலிங்கம் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஜ.நா விசாரணைக் குழுவிற்கு மலேசியத் தமிழர்கள் வரவேற்பு: ஈஸ்வரலிங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com