Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அனோமா பொன்சேகாவின் தாயார் மரணமானார். அவரது இறுதிச் சடங்கு மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. அன்னாரது பூதவுடல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சலையில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்கு, இராணுவத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஜனநாயக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுக்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

அனோமா பொன்சேகாவின் குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

0 Responses to அனோமாவின் தாயார் மரணம் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள சரத்துக்கு அனுமதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com