சுடரொளி , உதயன் ஆசிரியர் வித்தியாதரன் அவர்கள் தான் வட மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடபோவதாக கூறியுள்ளார்.சிரேஷ்ட ஊடகவியலாளரான வித்தியாதரன் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சுடர் ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பதவியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடவே ஏதுவாக விலகினார் என கூறப்படுகின்ரது.
இது தொடர்பாக வித்தியாதரன் கொழும்பு தமிழ் இணையத்திற்கு வழங்கிய குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளமை வருமாற,
கடந்த வாரம் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவது தொடர்பில் இலங்கையில் உள்ள சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் தன்னை சந்தித்து சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள் அரசியலில் இறங்க வேண்டும். அந்த அடிப்படையில் எதிர்வரும் வடமாகண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் படி வேண்டினர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த தயார் என்றால் தான் போட்டியிட தயார் என்றேன்.
இந்த விடயம் சம்பந்தமாக அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடி சாதகமான பதில் தருவதாக கூறினார்கள்.
அவர்களின் பதிலை எதிர்பார்த்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் போது தமிழ் மக்களுடன் இருந்து மிகவும் கஷ்டப்பட்டவன் என்ற வகையில் வடமாகண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட பொருத்தமானவன் என நினைப்பதாக ஊடகவியலாளர் வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.



0 Responses to வடமாகாண முதலமைச்சர் பதவிக்கு ஊடகவியலாளர் வித்தியாதரன் போட்டி