Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசியத் தலைவா தேசியத் தலைவா!

தேசம் எழுதிய தீந்தமிழா!-கை

வீசிய வீச்சினில் வேங்கையின் மூச்சில்

விளைத்தனை ஈழம் பெருந்தலைவா! - தேசியத்


ஊர்க லடங்கிலும் உலக மடங்கிலும்

ஏர்முனைய யாக்கிய ஈழமகன்-ஈழம்

வாழும் உலகினை வார்ப்புகள் ஆக்கிய

வரலா றெழுதிய வண்ணமகன்! - தேசியத்


ஆகுதி யானவர் ஏகிக் களம்புக

வேதம் உரைத்திட்ட வித்துவனே-தமிழர்

சாகும் நிலையிலும் ஈழம் எழுதிடும்

சந்ததி கொடுத்தாய் தத்துவனே! -தேசியத்


காடு எரிந்தது ககனம் எரிந்தது

நாடு மறந்திலை நாயகனே-பெற்ற

வீடு உலவிய வெற்றித் திருமகள்

வீழ்ந்தும் மறந்திலை ஈழமதே! -தேசியத்


நீயொரு தலைவன் நீதான் தலைவன்

நீள்நிலம் எங்கும் நீயொருவன்-தமிழ்த்

தாயவள் தந்த தங்கத் தலைமகன்

சாயாத ஈழம் படைத்தமகன்! -தேசியத்


-புனிதன்

0 Responses to வாய்மைத் திருமகன்: கவிதை வடிவம் புனிதன் (படம் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com