Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இணைய வழி மாவீரர் நினைவாலயம்

பதிந்தவர்: தம்பியன் 25 November 2010

தமிழ் மண்ணின் விடிவிற்காக தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்து களமாடி வித்தான மாவீரர்களின் நினைவாய் தமிழர் தாயகமெங்கிலும் மாவீரர் நினைவாலயங்கள் அமைக்கப்பட்டு அவை புனிதமாகப் பேணப்பட்டு வந்தமையும் தமிழ் உறவுகள் உணர்வு பூர்வமாக அந்த நினைவாலயங்களுக்குச் சென்று தமது வணக்கங்களை செலுத்தி வந்ததும் அனைவரும் அறிந்ததே.

தாயகத்தில் அண்மையில் ஏற்பட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து உலக நாகரீகங்களுக்கெல்லாம் முரணாக சிங்கள அரசாங்கத்தினால்; எமது மாவீரர் துயிலுமில்லங்கள் சிதைக்கப்பட்டு உருத்தெரியாமல் அழிக்கப்பட்ட செய்தி உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை மட்டுமன்றி மனித நேயத்தை மதிக்கின்ற அனைவரையும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளன.

மாவீரர்கள் மயானங்களைச் சிதைப்பதன் மூலமும் ஆவணங்களையும் சின்னங்களையும் அழிப்பதன் மூலமும் மாவீரர்களின் தியாகங்களையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அர்ப்பணிப்பையும் தமிழ் மக்கள் மனதிலிருந்து அழித்து விடலாம் என்ற சிங்கள இனவெறி அரசினது கணக்கு தப்புக்கணக்காகவே போகப் போகிறது என்பது வெள்ளிடைமலை.

இந்த நிலையில் உலகம் பூராவும் உள்ள தமிழ் உறவுகள் மாவீரர்களுக்குத் தங்கள் வணக்கத்தைத் தெரிவிப்பதற்கும் மாவீரர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும் ஏற்ற வகையில் மாவீரர் துயிலுமில்லமொன்று ஈழம்வெப் (EelamWeb) இணையத்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ் மண்ணில் வீரகாவியமான எம் தமிழ் மறவர்கள் குறித்த விபரங்களை ஆவணப்படுத்தி வைப்பதுடன் மாவீரர்களுக்கு விளக்கேற்றி உங்கள் வணக்கங்களைத் தெரிவிப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாவீரர்கள் குறித்த உங்கள் நினைவுகள், தகவல்கள் போன்றவற்றையும் இத் தளத்தில் பதிவு செய்யக் கூடியதாக இருக்கும்.

மாவீரர் துயிலுமில்லங்களின் அடிப்படையில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த மாவீரர் துயிலும் இல்லங்களில் குறித்த மாவீரர் தொடர்பான விபரங்களைத் தேடும் வசதி, அவர்களது கல்லறையின் முன்னால் விளக்கேற்றும் வசதி, அவர்கள் தொடர்பான ஆதங்கங்கள் மற்றும் உணர்வலைகளைப் பதிவு செய்யும் வசதி போன்ற இன்னோரன்ன வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சுமார் 17,500 இற்கு மேற்பட்ட மாவீரர்களின் விபரங்கள் இதுவரை தரவேற்றப்பட்டுள்ள இத்தளத்தில் அனைத்து மாவீரர்களின் விபரங்களையும் இணைக்கும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

http://www.eelamweb.com/ என்ற இணையத்தள முகவரியினூடாக இந்த மாவீரர் இல்லத்தினுள் நுழையக் கூடியதாக இருக்கும்.

தாயகத்தில் அமைந்திருந்த மாவீரர் துயிலுமில்லங்கள் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர்களின் நினைவுகளை மீட்டுவதற்கும் அவர்களின் தியாகங்களைப் போற்றி எமது வணக்கங்களைத் தெரிவிப்பதற்கும் ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணைய வழி மாவீரர் துயிலுமில்லம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு ஆறுதலைத் தரும் என்பதில் மிகையில்லை.

காணொளிகள்.

56வது அகவை காணும் தேசியத் தலைவர் காணொளிகள்.

மாவீரர் காணொளிகள்.

1 Response to இணைய வழி மாவீரர் நினைவாலயம்

  1. i'm yarl,verry verry thanks ur prosse.like this

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com