கனேடிய தேசியக் கொடி ஏற்றபட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து தமிழீழ கொடிக் ஏற்றபட்டது.
அடுத்த தாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அதன்பின் அங்கு வருகைதந்திருந்த மாணவர்கள் மலர்தூவி மாவீர்ர்களுக்கு தமது வணக்கத்தை தெரிவித்தனர்.
இதன் பின்னர் மாணவர்களால் ஓழுங்குசெய்யப்பட்ட எழுச்சி நடனங்கள் பேச்சுக்கள் பாடல்கள் மற்றும் நாடகங்கள் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் எமது வரலாற்றை விளக்கும் வண்ணம் காட்சி படுத்தி வேற்று இன மாணவர்கள் விளங்கும் வண்ணம் ஏற்பாடு செய்து இருந்தார்கள்
பெருமளவு மாணவர்களின் பங்களிப்புடன் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீர்ர் தின நிகழ்வு இந்த ஆண்டே முதன்முறையாக இந்தப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வானது புலம்பெயர் வாழ் தமிழ் இளைஞர்களின் விடுதலை உணர்வு நீர்த்துப்போகவில்லை என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது.












மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to கனடா ரொறொண்டோ பல்கலைக்கழகத்தின் (UFT ) நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு (படங்கள் இணைப்பு)