Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஊழல் - புதுக் குறள்கள் - ”சர்வசித்தன்”

பதிந்தவர்: ஈழப்பிரியா 27 December 2010

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ் நாடு

எனப் பெருமிதம் பொங்கப் பாடினான்முண்டாசுக் கவிபாரதி !

அவனது போற்றுதலுக்கு ஆளான வள்ளுவனும் தனது குறட்பாவில்ஊழல்என்னும் தலைப்பில் எந்தவொரு அத்தியாயத்தையும் உடன் இணைக்கவில்லை! களவு, சூது, கள் என்று மாந்தர் புறந்தள்ள வேண்டுவன பற்றியெல்லாம் எழுதி வைத்துவிட்டுப் போனவன், இன்று நமது அரசியலார் புதுமையாய்(?) புகலிடந்தேடியிருக்கும் இவ் ஊழலைப் பாடாமல் விட்டது பெருங் குறையல்லவா?

அதுவும், வள்ளுவனை ஈந்து புகழ்கொண்ட தமிழகத்தில் மக்களின் தொண்டர்களாய் முகமூடி அணிந்திருக்கும்மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர் ஒருவரே; அந்த வானையும் மிஞ்சும் வகையில் ஊழல் புரிந்திருப்பதாக உலகமே பேசிக்கொண்டிருக்கும் போது, அந்த ஊழலின்மகிமைபற்றி எழுதாமல் இருப்பதுஊழலைஅவமதிப்பதாகாதா?

எனவே, எனது சிற்றறிவுக்கு எட்டியவாறு சிலகுறள்களை உங்கள் முன் வைக்கலாம் என நினைக்கிறேன்.

ஊழலை விடவும் இக் குறட்பாக்கள் மோசமானவையாக இருக்காது என்பது என் நம்பிக்கை.

01. ”அமைச்சர்க் கணிகலன் அதி ஊழல்-அதுவின்றி

இமை மூடி ஆழ் உறக்கம் இல்

02. ”ஊழல் எனப்படுவது யாதெனில், தம்சுற்றம்

வாழ வகைசெய்யும் ஆறு

03.” எப்பொருள் எவர்வழியாய்க் கிட்டினும்,அனைத்துமவர்

கைப் பொருளாய் மாற்றும் மருந்து

04. “ஊழல் புரிந்தார்க்கு உய்வுண்டு, அவ்வூழல்

ஆளும் இனமாயின் இங்கு

05. ”பொருளாசை,பொய்வேடம்,போலித் தன்மானம்

போற்றுபவர்க் குளதிந்த நோய்

06. ”மக்கள் வரிப்பணத்தை மடக்கித் தம்பையுள்

வைப்பதே ஊழிற் கழகு

07. ”எல்லா இடத்தும் நீக்கமற நிறைந்திருக்கும்

வல்லமை ஊழற்(கு) உண்டு

08. ”ஊழல் எனவொன்று உலகத் திருக்கையில்

உழைப தமைச்சுக் கிழுக்கு

09. ”மேலிருந்து கீழ்ப்பாயும் நீரருவி; பதவிக்

கீழிருந்து மேலேறும் ஊழல்

10. ”எத்திப் பிழைப்பவரும் மேலாவார்; ஊழலதை

நத்திப் பிழைப்பவரி லிங்கு.”

0 Responses to ஊழல் - புதுக் குறள்கள் - ”சர்வசித்தன்”

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com