
யாழில் இடம்பெற்றுவரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக என்று கூறிக்கொண்டு பொலிசாரும் இராணுவத்தினரும் கூட்டாக வீடு வீடாகச் சென்று அங்குள்ள மக்களின் தகவல்களைத் திரட்டி வருகின்றனர்.
அதற்கு மேலதிகமாக வழமைக்கு மாறாக தற்போது யாழ். நகரப் பகுதியில் இராணுவத்தின் சோதனைச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டு, சோதனை நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளுக்கு வெளியில் மின்குமிழ்களை எரிய விடவேண்டுமென்றும் இராணுவத்தினர் வற்புறுத்த ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறான நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், குற்றவாளிகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக பொதுமக்களை இம்சைக்குள்ளாக்கும் விதத்தில் படைத்தரப்பின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக பல தரப்பினராலும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Responses to யாழில் மீண்டும் பொலிஸ் பதிவு