Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சர்வதேசம் சுமத்தியுள்ள ஈழத் தமிழர்கள் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து மஹிந்த ராஜபக்ஷவை விரைவில் விடுவிக்கப்பட்டுவிட முடியாதென மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், யுத்தக் குற்றம் தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை தண்டிக்காமல் விடமாட்டார்கள் என வைகோ குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் முடிவு செய்வார் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இந்த 2011ஆம் புத்தாண்டில் தமிழக அரசியலில் மாற்றங்களும் திருப்பங்களும் ஏற்படும். விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஸ்பெக்ட்ரம் விவகாரம், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, முல்லை பெரியாறு விவகாரம், இலங்கை தமிழர் பிரச்சனை ஆகியவற்றை முன்வைத்து நாங்கள் பிரச்சாரம் செய்வோம் என அவர் கூறியுள்ளார்.

0 Responses to புலம்பெயர் தமிழர்கள் ராஜபக்ஷவை தண்டிப்பார்கள்: வைகோ உறுதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com