சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு கடந்த வாரம் சமர்பித்த அறிக்கை நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.நாவின் பாதுகாப்புச்சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார தலைவர் லியன் பெஸ்கோ அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். எனினும் சிறீலங்கா தொடர்பான அறிக்கையை ரஷ்யா எதிர்த்துள்ளது.
ஆனால் ஐவேரி கோஸ்ட் பிரச்சனை தொடர்பிலும் ரஷ்யா தனது எதிர்ப்பை காண்பித்த போதும், ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக மேற்குலக நாடுகள் படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தன.
இதனிடையே, சிறீலங்கா அரசே ஐ.நாவின் அறிக்கையை ஊடகங்களுக்கு வழங்கியதாக ஐ.நா அதிகாரிகள் உறுதிபடத் தெரிவிப்பதாக ஐ.நாவின் உள்ளகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.



0 Responses to ஐ.நாவின் அறிக்கைக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு