Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்சவை போர்க்குற்றவாளி என அனைத்து மாநிலங்களிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பயணிகள் விடுதியில் நேற்று 10.07.2011 அன்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கையில் தனி ஈழம் அமைவதுதான் தமிழர்களின் குறிக்கோள். கடைசி தமிழன் உள்ளவரை அதை கேட்பான். ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என எங்களது கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.

சமீபத்தில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.

இதே தீர்மானத்தை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை தவிர கர்நாடகா, குஜராத் என மற்ற அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என்று எங்கள் கட்சி சார்பில் விரைவில் அனைத்து மாநில முதல் மந்திரிகளை சந்தித்து பேசவும், இதுபற்றி கடிதம் எழுதவும் உள்ளோம்.

இலங்கையில் 1 லட்சத்து 76 ஆயிரம் தமிழர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டு உள்ளனர். இதுவரையில் 554 தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் முன்னாள் மத்திய மந்திரி ஜோர்ஜ் பெர்ணான்டஸ், தமிழர்களுக்கு செய்த உதவிகளை கூட தற்போது உள்ள தமிழக மத்திய மந்திரிகள் யாரும் உதவி செய்யவில்லை என்றார்.

1 Response to ராஜபக்சவை போர்க்குற்றவாளி என அனைத்து மாநிலங்களிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: சீமான்

  1. இளமாறன் தமிழ் நாடு‍
    இதே தீர்மானத்தை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை தவிர கர்நாடகா, குஜராத் என மற்ற அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என்று‍ நாம் அனைவரும் மின்னஞல் மூலமாக தனிதனியாக வலியுறுத்தலாம். நான் ஏற்கனவே குஜராத் அரசுக்கு‍ வலியுறுத்தியதற்க்கு‍ எனக்கு‍ எனது‍ விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டதாக மின்னஞல் வந்தது.
    அனுப்புனர் ForeignAffairs@gi.com
    பெறுநர் illamaran3@gmail.com
    தேதி 10 ஜூன், 2011 9:04 pm
    தலைப்பு Sri Lankan Tamils
    Dear Sir,
    illamaran
    We have taken note of your message and the same has been forwarded to concerned Authorities for appropriate action.
    From,
    Foreign Affairs
    ForeignAffairs@gi.com

    இது‍ போல் சீமான் அவர்கள் கட்சி ரீதியாக முயற்சி எடுபதற்கு‍ முன், தமிழர்களாகிய நாம் அனைவரும் இது‍ போன்று‍ முயற்சி செய்வதன் மூலம் சீமான் அவர்கள் , அந்த மாநில முதலைமைச்சரை சந்திக்கு‍ம் போது‍ , நமது‍ மின்னஞசல்கள் வலு‍ சேர்க்கும்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com