Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

30 வீதமான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சீர்குலைத்து அரசாங்கம் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலை மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் புத்தகங்களுக்கான நிதியில் அரசாங்கம் 35 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலவச புத்தகங்கள் வழங்கும் திட்டம் ஆரம்பமாகி 30 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், 30 வீத மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை அரசாங்கம் சீர்குலைத்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டின் அபிவிருத்தியை ஏற்படுத்த மாணவர்களின் கல்வி நடவடிக்கையை மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானதென அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to 30 வீதமான மாணவர்களின் கல்வி நடவடிக்கையை சீர்குலைத்து அரசாங்கம் கின்னஸ் சாதனை: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com