Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று, இலங்கைக்கெதிராக கொண்டுவரும் தீர்மானம் தொடர்பான கலந்துரையாடுவதற்கு புதுடெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளிலேயே அமெரிக்கா இறங்கியுள்ளது. இதுபற்றி இந்திய அரசுடன் பேச்சு நடத்தவே உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்றை அமெரிக்கா அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று புதுடெல்லியைச் சென்றடைந்துள்ளதாக குறித்த அதிகாரிகள் குழு, புதுடெல்லியில் யாருடன் பேச்சு நடத்தினர் என்ற விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to இந்தியாவின் ஆதரவைப் பெற அமெரிக்காவின் உயர்மட்டக்குழு புதுடெல்லி விஜயம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com