Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடு குடும்ப அரசியலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குடும்ப அரசியலிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டுமென புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் டொக்டர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

குடும்ப அரசியலுக்கு எதிராக மக்கள் அணி திரளா விட்டால் இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த நாடு சீரழிந்து விடும். இன்று நாட்டில் மிக விசித்திரமான ஆட்சி நடைபெறுகின்றது.

மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை. நாடாளுமன்றில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆளும் கட்சியினர் உரிய பதிலளிப்பதில்லை.

அரசாங்கத்தின் விசர் வேலைகளினால் மக்களுக்கு வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு உயர்வடைந்துள்ளது, குறைந்தபட்சம் 7500 ரூபா சம்பள உயர்வேனும் வழங்கப்பட வேண்டும் என விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

0 Responses to குடும்ப அரசியலிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும்: விக்ரமபாகு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com