டென்மார்க்கில் வழமை போல் மாவீரர்நாள் கொல்பெக்(Holbæk) கேர்ணிங் (Herning)
ஆகிய நகரங்களில் சிறப்பாக நடைபெற்றது. இம்மாவீரர் நாள் நிகழ்வுக்கு
ஒவ்வொரு இடங்களிலும் பல நூற்றுக்கணக்கான மக்கள் எழுச்சியுடன் கலந்துகொண்டு,
தாயக விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை வித்தாக்கிய மாவீரர்களை வணங்கிச்
சென்றனர்.
மாவீரர் நாள் நிகழ்வானது பொதுச்சுடரேற்றம், தேசியக்கொடியேற்றம், ஈகச்சுடரேற்றம், மலர்வணக்கம், அகவணக்கம், துயிலும் இல்லப்பாடல் போன்றவற்றுடன் ஆரம்பமாகியது. மாவீரர்களின் உறவினர்கள் மாவீரர்களின் கல்லறைகள் மற்றும் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவியும் சுடரேற்றியும் வணங்கினர். அதனைத்தொடர்ந்து, மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள்,செயற்பாட்டாளர்கள் அனைவரும் மாவீரச் செல்வங்களை வணங்கினர்.
இதையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் பற்றிய அறிக்கை வாசிக்கப்பட்டது. இவைதவிர மாவீரர் கானங்கள், சிறப்புரை, எழுச்சி நடனங்கள், நாடகங்கள் போன்ற நிகழ்வுகள் இம்மாவீரர்நாள் நிகழ்வுக்கு மேலும் எழுச்சியை ஊட்டின.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் இசைக்கவிடப்பட்டு தேசியக்கொடி இறக்கத்துடன் இம்மாவீரர் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்தன.








































மாவீரர் நாள் நிகழ்வானது பொதுச்சுடரேற்றம், தேசியக்கொடியேற்றம், ஈகச்சுடரேற்றம், மலர்வணக்கம், அகவணக்கம், துயிலும் இல்லப்பாடல் போன்றவற்றுடன் ஆரம்பமாகியது. மாவீரர்களின் உறவினர்கள் மாவீரர்களின் கல்லறைகள் மற்றும் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவியும் சுடரேற்றியும் வணங்கினர். அதனைத்தொடர்ந்து, மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள்,செயற்பாட்டாளர்கள் அனைவரும் மாவீரச் செல்வங்களை வணங்கினர்.
இதையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் பற்றிய அறிக்கை வாசிக்கப்பட்டது. இவைதவிர மாவீரர் கானங்கள், சிறப்புரை, எழுச்சி நடனங்கள், நாடகங்கள் போன்ற நிகழ்வுகள் இம்மாவீரர்நாள் நிகழ்வுக்கு மேலும் எழுச்சியை ஊட்டின.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் இசைக்கவிடப்பட்டு தேசியக்கொடி இறக்கத்துடன் இம்மாவீரர் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்தன.





0 Responses to மாவீரர் நாள் 2012, டென்மார்க் (படங்கள் இணைப்பு)