Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டேனிஸ் அலெக்ஸ் என்ற பிரெஞ்சு உளவாளியை கொலை செய்ய நாங்கள் தீர்மானித்தோமென்று ஷபாப் இயக்கத்தினர் தெரிவித்தனர்.

கடந்த 2009ம் ஆண்டு முதல் பிடித்து வைத்திருக்கும் இவரை பிரெஞ்சு இராணுவம் சோமாலியரிடமிருந்து விடுவிக்க எடுத்த முயற்சி தோல்வியடைந்ததோடு வேறு இரண்டு இராணுவ வீரர்களையும் ஷபாப் இயக்கத்தாரிடம் இழந்து விட்டனர்.

இதற்கு முன்பு அல் ஷபாப் இயக்கத்தினரின் செய்தித்தொடர்பாளரான அலி முகமது ராகே, டேனிஸ் உயிரோடு இருப்பதாக அறிவித்தார்.

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு டேனிஸ் பற்றிய தகவலை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

பிரெஞ்சு இராணுவம், டேனிஸ் அலெக்ஸ் முன்பே இறந்திருக்கக்கூடும் என்றும் ஷபாப் இயக்கத்தினர் தகவல்களை மாற்றி மாற்றி வெளியிடுகின்றனர் என குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்வாறு முன்பே இறந்த ஒருவரை தற்போது தான் கொல்ல முடிவு செய்திருப்பதாக தீவிரவாதிகள் தெரிவிப்பதை இராணுவத்தால் ஏற்க முடியவில்லை.

0 Responses to பிரெஞ்சு உளவாளியைக் கொல்ல தீவிரவாதிகள் முடிவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com