Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


முற்போக்குவாத அமைப்புக்களை போஷித்து வளர்க்கும் அரசாங்கம் நாட்டில் இன்னொரு பயங்கரவாத அமைப்பை உருவாக்குவதற்கு வழி வகுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம்சாட்டினார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டிலுள்ள முற்போக்குவாத அமைப்புக்களை போஷித்து வளர்க்கும் செயற்பாடானது நாட்டில் இன்னொரு பயங்கரவாத அமைப்பை உருவாக்கும் செயலாகவுள்ளது.

இதனை அரந்தலாவை பிக்குகள் மீது இடம்பெற்ற தாக்குதலை நினைவுபடுத்தும் வகையில் அவ்விடத்தில் அண்மையில் ஜனாதிபதியினால் நிர்மாணித்து திறந்து வைக்கப்பட்ட நினைவாலையம் வெளிப்படுத்துகின்றது.

இவ்வாறு இடம்பெற்ற குரூரத்தனமான சம்பவங்களை நிர்மாணித்து மக்கள் மத்தியில் ஒரு குரூரமான உணர்வை உருவாக்கவே இந்த அரசாங்கம் நினைக்கின்றது. அது தான் வட, கிழக்கில் இனங்களுக்கிடையிலான யுத்தம் உருவானதற்கு அடிப்படைக் காரணமாகும். அது இன்று வியாபித்து இலங்கை பூராகவும் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கையில் நான்கு பிரதான மதங்களை தவிர வேறு மதங்கள் இருக்கக் கூடாதென அரசாங்கத்தினால் சட்டமொன்று உருவாக்கப்படவுள்ளது. இது எவ்வாறு முடியும்? எவருக்கும் எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கு உரிமையும் சுதந்திரமும் உள்ளது.

தமிழ்நாட்டில் இடம்பெறும் எதிர்ப்புகள் மற்றும் ஜெனீவா பிரேரணை என்பன இலங்கைக்கு எதிரானதல்ல எனவும் அது ராஜபக்ஷ தலைமைக்கு எதிரானது எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நீதி, நியாயத்தை சிறுதுளியேனும் பொருட்படுத்தாது ஆட்சி நடத்திச் செல்லும் ராஜபக்ஷ தலைமையின் ஊடல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து 2014ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

0 Responses to தமிழகத்தின் எழுச்சி இலங்கைக்கு எதிரானதல்ல, ராஜபக்ஷவுக்கு எதிரானது: மங்கள சமரவீர

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com