Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மதவாத சக்திகளை ஊக்குவிக்கும் பஜகவுடன் மதிமுக கூட்டணி சேரக் கூடாது என்று, தேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் மதிமுகவுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அந்த  கோரிக்கையில், பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே  தமிழர்கள் விவகாரத்தில்  ஒரே கொள்கையைத்தான் கடைப்பிடிக்கின்றன  என்றும், மீனவர்களின் பிரச்சனைகளை இரு  மீனவர்களின் பிரதிநிதிகள் பேசுவதால் மட்டுமே தீர்க்க முடியாது என்றும், இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் கூறியுள்ளதோடு, ஐநா சபையில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

எனவே, மதவாத சக்திகளை ஊக்குவிக்கும் பாஜகவுடன் மதிமுக கூட்டணி வைக்க கூடாது என்றும் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

0 Responses to மதவாத சக்திகளை ஊக்குவிக்கும் பாஜகவுடன் மதிமுக சேரக் கூடாது! : திருமாவளவன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com