Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா அரசாங்கம் முன்வைக்கவுள்ள பிரேரணையை, மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையே வடிவமைத்திருப்பதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

நம்பிக்கையான இடத்தில் இருந்து இது குறித்த உறுதியான தகவல் கிடைத்திருப்பதாக இலங்கை வெளிவிவகார செயலாளர் செனுகா செனேவிரட்ன தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நவநீதம் பிள்ளை இலங்கை விடயத்தில் பக்கச்சார்பாக செயற்பட்டுள்ளமை உறுதியாகி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்துக்கு கண்டனம் தெரிவித்து, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் காரியாலயத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை அமெரிக்காவின் இலங்கை தொடர்பான பிரேரணை எதிர்வரும் மார்ச் மாதம் 26ம் திகதி இலங்கை நேரப்படி மாலை 3 மணிக்கு மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to அமெரிக்கப் பிரேரணையை நவநீதம்பிள்ளையே வடிவமைத்தார் என்கிறது அரசாங்கம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com