Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுடனான ஜோன் அமரதுங்கவினால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இன்று வெள்ளிக்கிழமை  அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, இன்னும் சில நாட்களில் குறித்த பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். போதைப் பொருட்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் நோக்கிலேயே அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

0 Responses to ‘மஹிந்த ராஜபக்ஷ’ அரசாங்கத்துக்கு எதிராக ஐ.தே.க நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com