Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஏழு தமிழர் விடுதலை - கவிபாஸ்கர்

பதிந்தவர்: தம்பியன் 19 February 2014

இருபத்து மூன்று

ஆண்டுகளுக்குப் பிறகு

உப்புக் கண்ணீர்

இனித்தது!



தமிழர் உரிமைப் போராட்டம்

உயிர்த்தெழுந்தது

ஏழு தமிழர் விடுதலை!



“விடுதலை”

வார்த்தையைக் கேட்டு

வேலூர் சிறைச் சுவர்கள்

அழுது சிரித்திருக்கும்..

அற்புதம்மாளின்

விழிக்கிணறு

பொங்கி சிரித்தது போலவே!



சாவுக் கயிறின்

சாம்பலை

நீதிக் கடலில்

கரைத்தார்

சதா சிவம்!

நாங்கள்

செங்கொடி நெருப்பின்

விடியலைப் பார்த்தோம்!



இது நாள் வரை

பூட்டிக் கிடந்த

சட்டமன்றச் சாளரம்

“மனிதம்” பேசும்

ஓசை கேட்டு

பூத்திருக்கிறது!



பொய்யான இந்தியா

பொய்யாகப் புனைந்த கதை

பொய்த்து விட்டது!



நன்றாக உற்றுப்பார்!

தூக்குக் கயிற்றில்

தொங்குவது

இந்தியத்தின் தலை!

பிணத்தை திரும்பி பார்க்காமல்

நடந்துவா!

அடுத்து…..!

தமிழ்நாடு விடுதலை..!

0 Responses to ஏழு தமிழர் விடுதலை - கவிபாஸ்கர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com