Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகிந்தராஜபக்ஷவின் குடும்பத்தினர் கலாசாரம் தெரியாதவர்கள் என்று ஆங்கில ஊடகம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற பாலியல் கொடுமைகள் தொடர்பில் அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டிருந்ததுடன், யுத்த காலத்தில் பாலியல் கொடுமைகள் இடம்பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டிருந்தது. 

இது தொடர்பில் அண்மையில் பத்திரிகையாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ, பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டவர்களை, அவர்களை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவரே மணக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஒருவேளை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளானவர்கள் 18 வயதுக்கு குறைவானவராக இருந்தால், அவருக்கு 18 வயதாகும் வரையில் காத்திருந்து இந்த திருமணத்தை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதேபோன்ற கருத்தையும் மகிந்தவின் மகன் நாமல்ராஜபக்ஷவும் தமது டுவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார். 

இவற்றை மேற்கோள்காட்டியே குறித்த பத்திரிகை அந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது.

0 Responses to மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் கலாசாரம் தெரியாதவர்கள் - ஆங்கில ஊடகம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com