Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்திற்கும் இடையில் நட்பு ரீதியிலான சந்திப்பொன்று திருகோணமலையில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்தோடு, கிழக்கு மாகாண சபையுடன் கருத்தொற்றுமையுடனும், புரிந்துணர்வுடனும் ஒன்றாக செயற்படுவதற்கான தமது விருப்பத்தை வடக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் வெளியிட்டுள்ளதாகவும் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 Responses to வடக்கு மாகாண முதலமைச்சருக்கும், கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com