Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொதுநலவாய நாடுகளில் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடினார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள பொதுநலவாய நாடுகளில் செயலாளர் நாயகம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரின் அலுவலகத்தில் சந்தித்தார்.

பொதுநலவாய அமைப்பின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால பதவி வகிக்கிறார்.

இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு மொல்டா தீவில் நடைபெறவுள்ளது. மாநாடு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கும் முகமாக இந்த விஜயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஜனாதிபதி மைத்திரி - கமலேஷ் சர்மா இன்று சந்திப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com