தேர்தல் முறை மறுசீரமைப்பிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் 19வது திருத்தத்துடன் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20வது திருத்தத்தையும் நிறைவேற்ற சகல நடவடிக்கைகளும் எடுக்க இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
255 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் கலப்பு முறையொன்றிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள அதேவேளை, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்படுவார். 238 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் முறையொன்று குறித்த யோசனையொன்றுக்கும் தேசிய நிறைவேற்றுக் குழுவிற்கு முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரு யோசனைகளில் சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவத்தைப் பேணும் சகலருக்கும் ஏற்கக்கூடிய யோசனையை மக்கள் கருத்துக்களையும் பெற்று முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
0 Responses to தேர்தல் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி!