பிரித்தானியாப் பாராளுமன்றில் , யூதர்கள் MP யாக இருக்கிறார்கள். பல இந்தியர்கள் MP யாக இருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த ஒரு தமிழரும் பாராளுமன்ற உறுப்பினர் ஆனதே இல்லை. நாளை நடக்கும் தேர்தலில் உமா குமாரன் வெற்றிபெற்றால் , அது ஒரு சரித்திரமாக மாறும். மேலும் ஈழத் தமிழர் ஒருவர் பிரித்தானிய பாராளுமன்றம் சென்றால் , தமிழர்களது பல பிரச்சனைகளை அவர் அங்கே ஒலிக்கச் செய்வார். இதனூடாக எமது போராட்டத்திற்கு பெரும் வெற்றிகள் கிட்ட வாய்ப்புகள் உள்ளது.
அதுபோக கிழக்கு ஹரோ பகுதியில் வாழும் தமிழ் மக்கள் , தமது MP யோடு தமிழில் உரையாடி உங்கள் கோரிக்கைகளை முன்வைக்கலாம். சமூகப் பிரச்சனைகள். சமூகத் தேவைகள் ,கோவில் கட்ட , மத வழிபாட்டு இடங்களை கவுன்சில் ஒதுக்கி தரவேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை உங்கள் MP யிடம் நீங்கள் எடுத்துச் செல்ல முடியும். அவர் ஒரு தமிழராக இருப்பின் உங்கள் தேவைகளை அறிந்தவராக நிச்சயம் இருப்பார்.
எனவே நாளை நடைபெறவுள்ள தேர்தலில் அனைத்து தமிழர்களும் வாக்களியுங்கள். அதுவே எமது போராட்டத்தை அரசியல் ரீதியாக நகர்த்த பெரிதும் உதவியாக இருக்கும்.
0 Responses to லண்டனில் நாளை தமிழர் வரலாறு எழுதப்படுமா?