Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பு பல தடவைகள் திருத்தப்பட்டிருப்பதால், புதிய அரசியலமைப்பொன்றை தயாரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

19வது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளபோதும், தகவல் அறியும் சட்டம், மத்தியில் உள்ள அதிகாரங்களை மாகாண சபைகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்குப் பகிர்ந்து கொள்வது போன்றவற்றை உள்ளடக்கியதான புதிய அரசியலமைப்பொன்றே தற்பொழுது தேவையாகவுள்ளது என்று அவர் ‘தி ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு பல தடவைகள் மாற்றப்பட்டுள்ளது. இதனை வைத்துக் கொண்டு முன்செல்ல முடியாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் ஜயம்பதி விக்ரமரட்ன, 19வது திருத்தச்சட்டமூலம் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கியிருக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு உத்தேச தகவல் அறியும் சட்டமூலம் மிகவும் முக்கியமானது. உத்தேச தகவல் அறியும் சட்டம் அரசியல், சமூக உரிமைகள் மட்டுமன்றி பொருளாதார மற்றும் கலாசார உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்தியில் மையப்படுத்தப்பட்டிருக்கும் அதிகாரங்கள் மாகாண மட்டங்களில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்வதானது மத்திய அரசாங்கத்தை மேலும் பலப்படுத்த முடியும் என்று ஜயம்பதி விக்ரமரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்: ஜயம்பதி விக்ரமரட்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com