Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வாழைச்சேனை பாசிக்குடா கடலில் நீராட சென்ற  இளைஞர் ஒருவர், நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கலேவெல கனாதென்ன பிரதேசத்தில் இருந்து 33 பேர் கொண்ட குழுவொன்று நேற்று காலை சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு பாசிக்குடா கடலுக்கு  சென்றனர்.

இவர்கள் பாசிக்குடா கடலில் குளிக்க சென்ற சந்தர்ப்பத்தில் எஸ்.ரீ.துஸான் துலன்ஜய என்ற 23 வயது இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைகளின் பின்னர் குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

0 Responses to வாழைச்சேனை பாசிக்குடா கடலில் மூழ்கி இளைஞன் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com