Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் மக்கள் பயமின்றி வாக்களிக்க இன்று துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்வடைந்த நிலையில், மக்கள் அனைரும் பயமின்றி வாக்களிக்க வேண்டும் என்று, துணை இராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்,இந்நிலையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து ஜனநாயக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வாக்காளர்கள் அனைவரும் அதிமுகவுக்கு வாக்களித்து, தம்மைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் விடுமுறை என்பதால் மதுக்கடைகளில் இன்று கூட்டம் அலைமோதியது.

0 Responses to ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் மக்கள் பயமின்றி வாக்களிக்க கொடி அணிவகுப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com