Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அமையும் புதிய பாராளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்புத் திருத்தம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்களில் விருப்பு வாக்கு முறையை ஒழித்து, அதிகாரம் கொண்ட சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்தும் முகமாக அரசியல் யாப்புத் திருத்தம் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஊழல் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கூடிய அதிகாரம் கொண்ட ஆணைக்குழு அவசியம். அது, அடுத்த அரசாங்கத்தில் உருவாக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to புதிய பாராளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்பு அறிமுகம்: சம்பிக்க ரணவக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com