Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வானத்திலிருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும் மர்மப்பொருள் ஒன்று, எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு அருகே பூமியைத் தாக்கும் என்று நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானில் சுற்றிக் கொண்டிருக்கும் அடையாளம் தெரியாத மர்மப்பொருள் ஒன்றே இலங்கை அருகே கடலில் விழவுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த மர்மப்பொருள், மூன்று தொடக்கம் 7 அடி வரை (சுமார் 2 மீற்றர்) நீளமுள்ளதாக இருக்கலாம் என்றும், இது ஏவுகணை ஒன்றின் பாகமாகவோ அல்லது சந்திரனுக்கு முன்னர் அனுப்பப்பட்ட விண்கலத்தின் பாகமாகவோ இருக்கலாம் என்று நாசாவின் நிபுணரான பில்கிரே தெரிவித்துள்ளார்.

இது, பூமியை வந்தடைய முன்னர் எரிந்துபோகும் என்று நம்பப்படுகின்ற போதிலும், அந்தப் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவதை தாம் விரும்பவில்லை என்றும் நாசா நிபுணர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்த மர்மப்பொருள் மிக வேகமாகவும், சூடாகவும் பூமியை நோக்கி வரும் என்றும், இது ஏவுகணை ஒன்றின் இயந்திரத்தின் பாகமாக இருக்கலாம் என்றும், மற்றொரு விண்வெளி நிபுணரான ஜொனாத்தன் மக் டோவல் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, விண்வெளியில் சுமார் 5 இலட்சம் பல்வேறு சிதைவுகள், சுற்றிக் கொண்டிருக்கின்றன என நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

0 Responses to வானத்திலிருந்து வரும் மர்மப்பொருள் நவம்பர் 13இல் இலங்கைக்கு அருகில் விழும்: நாசா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com