Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி கண்ணாடிகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று இன்று மாலை 3.50 மணியளவில் நுவரெலியா பதுளை பிரதான வீதியில் ஹக்கல தபால் நிலையத்திற்கு அருகாமையில் பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பயணித்த லொறியின் சாரதியும் சக ஊழியரும் சென்ற சக ஊழியர் படுங்காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

லொறியை வேகமாக செலுத்தியதால் சாரதியினால் லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணத்தினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 Responses to நுவரெலியாவில் இடம்பெற்ற லொறி விபத்தில் ஒருவர் வைத்தியசாலையில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com