“வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலம் பெறும் என்று புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் அப்போது என்னிடம் கூறினார்” என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளை தோற்கடித்து வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சிகள் சர்வதேசத்தினால் வரவேற்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம மற்றும் வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் இணைந்து எழுதியிருந்த "குழப்பநிலை மற்றும் ஸ்திரத்தன்மை" என்ற நூலின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கோத்தபாய ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த தயாரான போது, அவ்வாறு தேர்தலை நடத்தினால் அதில் தோல்வியடையலாம் என்று டக்ளஸ் தேவானந்தா கூறினார். அதேபோல், அந்த தேர்தலினால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பலம்பெறும் என்று தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் அப்போது கூறினார்.
எவ்வாறாயினும், வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருந்தார். யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்து, அப் பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்து சென்றார்.” என்றுள்ளார்.
விடுதலைப் புலிகளை தோற்கடித்து வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சிகள் சர்வதேசத்தினால் வரவேற்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம மற்றும் வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் இணைந்து எழுதியிருந்த "குழப்பநிலை மற்றும் ஸ்திரத்தன்மை" என்ற நூலின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கோத்தபாய ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த தயாரான போது, அவ்வாறு தேர்தலை நடத்தினால் அதில் தோல்வியடையலாம் என்று டக்ளஸ் தேவானந்தா கூறினார். அதேபோல், அந்த தேர்தலினால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பலம்பெறும் என்று தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் அப்போது கூறினார்.
எவ்வாறாயினும், வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருந்தார். யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்து, அப் பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்து சென்றார்.” என்றுள்ளார்.
0 Responses to வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் த.தே.கூ பலம் பெறும் என்று சித்தார்த்தன் என்னிடம் கூறினார்: கோத்தபாய