Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் நரேந்திர மோடி 25 கோடி இலஞ்சம் வாங்கினார் என்பதற்காக ஆதாரம் உள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி இருந்த போது ஆதித்யா பிர்லா குழுமத்திடமிருந்து 25 கோடி இலஞ்சம் பெற்றதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். 

டெல்லி சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பிரதமரின் பெயர் கருப்பு பண விவகாரங்களில் வந்திருக்கிறது.இதற்கு கெஜ்ரிவால், கடந்த 2013ம் ஆண்டு ஆதித்யா பிர்லா குழுமத்தில் நடந்த வருமான வரி சோதனையை குறிப்பிட்டுள்ளார். 

இந்த சோதனையின் போது ஒரு மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதில் மோடி குற்றவாளி என்பதற்கான ஆதாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதில், 2012ம் ஆண்டு நவம்பர் 16ம் திகதி குஜராத் முதல்வருக்கு 25 கோடி வெளிப்படையாக கொடுத்ததாக பதிவு இருக்கிறது. அப்போதைய முதல்வர் மோடி தான் என குறிப்பிட்டுள்ளார்.  

அப்போது மத்தியில் இருந்து காங்கிரஸ் கட்சியும் இது குறித்து வாய்திறக்கவில்லை என கெஜ்ரிவால் கடுமையாக சாடியுள்ளார். இதனால், அவர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கும் என சந்தேகிப்பதாக கெஜ்ரிவால் தெரவித்துள்ளார்.ஆம் ஆத்மி கட்சி தலைவரும்,டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் கிளப்பியுள்ள குற்றச்சாட்டு நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Responses to மோடி 25 கோடி இலஞ்சம் வாங்கினார்: கெஜ்ரிவால்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com