ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் பொதுமன்னிப்புக் கோரினார்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருந்த தருணம், அதாவது 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் நடந்து வரும் அடுத்த ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே பிரதமர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாவது, “நாங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கிறோம். புதிய தொழில்களை உருவாக்குகிறோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டாவது ஆண்டு நிறைவடையும் போது, வடக்கில் பெருமளவு அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்திருப்போம்.
எமது அரசாங்கம் பதவியில் இருந்த போது, யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டது. அதற்காக நாங்கள் வருந்துகிறோம். அதற்காக மன்னிப்புக் கோருகிறோம். நீங்கள் (மஹிந்த அணியினரை நோக்கி) ஆட்சியில் இருந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக மன்னிப்புக் கோருவதற்குத் தயாராக இருக்கிறீர்களா?” என்றுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருந்த தருணம், அதாவது 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் நடந்து வரும் அடுத்த ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே பிரதமர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாவது, “நாங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கிறோம். புதிய தொழில்களை உருவாக்குகிறோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டாவது ஆண்டு நிறைவடையும் போது, வடக்கில் பெருமளவு அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்திருப்போம்.
எமது அரசாங்கம் பதவியில் இருந்த போது, யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டது. அதற்காக நாங்கள் வருந்துகிறோம். அதற்காக மன்னிப்புக் கோருகிறோம். நீங்கள் (மஹிந்த அணியினரை நோக்கி) ஆட்சியில் இருந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக மன்னிப்புக் கோருவதற்குத் தயாராக இருக்கிறீர்களா?” என்றுள்ளார்.




0 Responses to யாழ். பொது நூலகம் எரிப்புக்கு பிரதமர் ரணில் மன்னிப்புக் கோரினார்!