மாகாண சபை என சொல்லப்படாமல் மாகாண அரசாங்கம் என சொல்லப்படுவதுதான் உகந்தது. அதைவிட பிராந்திய அரசாங்கம் என்று சொல்லப்பட வேண்டிய காலம் விரைவிலே வரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அப்படியாக, பிராந்திய அரசாங்கங்களுக்கு ஆட்சி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கும் இன்னொரு வித்தியாசமான நிரல் ஒன்று உருவாக்கப்பட்டு அவர்களும் தங்களின் அதிகாரங்களை கவனிக்கத்தக்க மாதிரியான புதிய அரசியலமைப்பு வர இருப்பது எல்லோருக்கும் தெரியும். போதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பல தடங்கல்கள் உருவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவிற்கான நெடுந்தாரகை படகுச் சேவையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்த நெடுந்தாரகை படகினை தந்து உதவிய அனைவருக்கும் வடபகுதி மக்கள் சார்பில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நெடுந்தீவிற்கு போய் வருவதென்றால் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் செல்லவேண்டும். அவசரமாக செல்ல வேண்டும் என்றால் கடற்படையின் அதிவேக படகிலேயே செல்லவேண்டும். அது இன்னும் பயங்கரமானதாக இருக்கும். ஆனால், தற்போது அந்த நிலைமை மாறி பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ள முடியுமானதாக உள்ளது.
மாகாண சபைகள் என சொல்லப்படாமல் மாகாண அரசாங்கம் என சொல்லப்படுவதுதான் உகந்தது. அதைவிட பிராந்திய அரசாங்கம் என்று சொல்லப்பட வேண்டிய காலம் விரைவிலே வரவேண்டும்.
அப்படியாக பிராந்திய அரசாங்கங்களுக்கு ஆட்சி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கும் இன்னொரு வித்தியாசமான நிரல் ஒன்று உருவாக்கப்பட்டு அவர்களும் தங்களின் அதிகாரங்களை கவனிக்கத்தக்க மாதிரியான புதிய அரசியலமைப்பு வர இருப்பது எல்லோருக்கும் தெரியும். போதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பல தடங்கல்கள் உருவாகிறது. அதனை முறியடிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல வழிகளை கையாண்டு வருகிறது.
இங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வருகை தந்து இருக்கிறார். வடக்கு கிழக்கு மக்களினுடைய உள் கிடக்கைகளை அறிந்து தனது கட்சி உயர் பீடத்திடம் தெரிவிப்பார் என நம்புகிறேன்.
எங்களுக்கு இருக்க வேண்டிய அதிகாரங்கள் பகிரப்பட்டு இந்த நாட்டிலே இருக்கின்ற 70 வருட கால இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு எமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். அதற்காக இரண்டு பிரதான கட்சிகளும் உழைக்க வேண்டும்.” என்றுள்ளார்.
அப்படியாக, பிராந்திய அரசாங்கங்களுக்கு ஆட்சி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கும் இன்னொரு வித்தியாசமான நிரல் ஒன்று உருவாக்கப்பட்டு அவர்களும் தங்களின் அதிகாரங்களை கவனிக்கத்தக்க மாதிரியான புதிய அரசியலமைப்பு வர இருப்பது எல்லோருக்கும் தெரியும். போதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பல தடங்கல்கள் உருவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவிற்கான நெடுந்தாரகை படகுச் சேவையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்த நெடுந்தாரகை படகினை தந்து உதவிய அனைவருக்கும் வடபகுதி மக்கள் சார்பில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நெடுந்தீவிற்கு போய் வருவதென்றால் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் செல்லவேண்டும். அவசரமாக செல்ல வேண்டும் என்றால் கடற்படையின் அதிவேக படகிலேயே செல்லவேண்டும். அது இன்னும் பயங்கரமானதாக இருக்கும். ஆனால், தற்போது அந்த நிலைமை மாறி பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ள முடியுமானதாக உள்ளது.
மாகாண சபைகள் என சொல்லப்படாமல் மாகாண அரசாங்கம் என சொல்லப்படுவதுதான் உகந்தது. அதைவிட பிராந்திய அரசாங்கம் என்று சொல்லப்பட வேண்டிய காலம் விரைவிலே வரவேண்டும்.
அப்படியாக பிராந்திய அரசாங்கங்களுக்கு ஆட்சி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கும் இன்னொரு வித்தியாசமான நிரல் ஒன்று உருவாக்கப்பட்டு அவர்களும் தங்களின் அதிகாரங்களை கவனிக்கத்தக்க மாதிரியான புதிய அரசியலமைப்பு வர இருப்பது எல்லோருக்கும் தெரியும். போதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பல தடங்கல்கள் உருவாகிறது. அதனை முறியடிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல வழிகளை கையாண்டு வருகிறது.
இங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வருகை தந்து இருக்கிறார். வடக்கு கிழக்கு மக்களினுடைய உள் கிடக்கைகளை அறிந்து தனது கட்சி உயர் பீடத்திடம் தெரிவிப்பார் என நம்புகிறேன்.
எங்களுக்கு இருக்க வேண்டிய அதிகாரங்கள் பகிரப்பட்டு இந்த நாட்டிலே இருக்கின்ற 70 வருட கால இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு எமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். அதற்காக இரண்டு பிரதான கட்சிகளும் உழைக்க வேண்டும்.” என்றுள்ளார்.




0 Responses to மாகாண சபை என்கிற அடையாளப்படுத்தல் நீங்கி ‘பிராந்திய அரசாங்கம்’ என்ற நிலை உருவாக வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்