கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட்டால் மாத்திரமே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்த முடியும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் உயர்ஸ்தானிகர் போல் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது, வடக்கு மாகாண முதலமைச்சரையும் அவர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சி.வி.விக்னேஸ்வரன், “வடக்கு மாகாண மக்களுக்கு எவ்வாறான உதவிகளை செய்ய முடியுமென வருகை தந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் உயர்ஸ்தானிகர் கேள்வி எழுப்பினர்.
போரினால் கணவனை இழந்த பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் முகமாக பல்வேறு செயற்திட்டங்களை வகுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கணவனை இழந்த பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை செய்து மீண்டும் சமூகத்துடன் இணைக்க வேண்டியுள்ளது கூறியுள்ளேன்.
கடந்த காலங்களில் இவ்வாறு தான் பல உதவித்திட்டங்களை வழங்கி வந்துள்ளோம் மீண்டும் இவ்வாறான உதவிகளை வழங்குவோம் என உறுதியளித்துள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கும் போது, எந்தவிதமான பயிற்சிகளையும் முன்னாள் போராளிகளுக்கு வழங்கவில்லை. மீளவும் தமது வாழ்க்கையினை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.
மாவட்டத்தில் ஏதாவது குற்றங்கள் நடந்தால், பொலிஸ் மற்றும் இராணுவம் முன்னாள் போராளிகளையே கைது செய்து செல்கின்றனர். இவ்வாறான கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். முன்னாள் போராளிகளுக்கு அங்கிகாரம் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியுமென கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
போர்க்குற்றங்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகள் நடைபெற வேண்டும். நடந்த தவறுகளுக்கு நீதி கிடைத்தால் மாத்திரமே சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் உருவாக்க முடியும். அரசியல் ரீதியான உரித்துக்களைப் பெற்றுத்தந்தால் மாத்திரமே ஏனைய விடயங்களில் கரிசனை கொள்ள முடியும். அரசியல் ரீதியான உரித்துக்களை வழங்குவதற்கு தென்பகுதியினர் தடையாக உள்ளனர்.
அதிகார பகிர்வு எவ்வாறு நாட்டிற்கு நன்மைகளைப் பயக்கும் என்பது பற்றி பல்கலைக்கழகங்களிலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான செயற்திட்டங்களை மேற்கொண்டால், வடக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமென எடுத்துக் கூறினேன்.” என்றுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் உயர்ஸ்தானிகர் போல் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது, வடக்கு மாகாண முதலமைச்சரையும் அவர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சி.வி.விக்னேஸ்வரன், “வடக்கு மாகாண மக்களுக்கு எவ்வாறான உதவிகளை செய்ய முடியுமென வருகை தந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் உயர்ஸ்தானிகர் கேள்வி எழுப்பினர்.
போரினால் கணவனை இழந்த பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் முகமாக பல்வேறு செயற்திட்டங்களை வகுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கணவனை இழந்த பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை செய்து மீண்டும் சமூகத்துடன் இணைக்க வேண்டியுள்ளது கூறியுள்ளேன்.
கடந்த காலங்களில் இவ்வாறு தான் பல உதவித்திட்டங்களை வழங்கி வந்துள்ளோம் மீண்டும் இவ்வாறான உதவிகளை வழங்குவோம் என உறுதியளித்துள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கும் போது, எந்தவிதமான பயிற்சிகளையும் முன்னாள் போராளிகளுக்கு வழங்கவில்லை. மீளவும் தமது வாழ்க்கையினை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.
மாவட்டத்தில் ஏதாவது குற்றங்கள் நடந்தால், பொலிஸ் மற்றும் இராணுவம் முன்னாள் போராளிகளையே கைது செய்து செல்கின்றனர். இவ்வாறான கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். முன்னாள் போராளிகளுக்கு அங்கிகாரம் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியுமென கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
போர்க்குற்றங்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகள் நடைபெற வேண்டும். நடந்த தவறுகளுக்கு நீதி கிடைத்தால் மாத்திரமே சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் உருவாக்க முடியும். அரசியல் ரீதியான உரித்துக்களைப் பெற்றுத்தந்தால் மாத்திரமே ஏனைய விடயங்களில் கரிசனை கொள்ள முடியும். அரசியல் ரீதியான உரித்துக்களை வழங்குவதற்கு தென்பகுதியினர் தடையாக உள்ளனர்.
அதிகார பகிர்வு எவ்வாறு நாட்டிற்கு நன்மைகளைப் பயக்கும் என்பது பற்றி பல்கலைக்கழகங்களிலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான செயற்திட்டங்களை மேற்கொண்டால், வடக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமென எடுத்துக் கூறினேன்.” என்றுள்ளார்.




0 Responses to இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட்டாலே நல்லிணக்கமும் சமாதானமும் சாத்தியம்: சி.வி.விக்னேஸ்வரன்