Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உத்தரப்பிரதேசத்தில் புதிய சட்டம் ஒன்றை இயற்றி, அதன்மூலம் 22 வருட வழக்கிலிருந்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விடுதலையாக உள்ளார்.

நீண்ட காலமாக அரசியல்வாதிகள் மீது நிலுவையில் உள்ள சாதாரண வழக்குகளில் இருந்து அவா்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க வழிவகை சட்டம் கடந்த வாரம் உத்தரப்பிரதேச, மாநில சட்டசபையில் இயற்றப்பட்டது. இச்சட்டம் கடும் குற்றங்கள் தொடா்பான வழக்குகளுக்கு பொருந்தாது. இச்சட்டத்தை பயன்படுத்தி அரசியல்வாதிகளுக்கு எதிராக உள்ள சுமார் 20,000 வழக்குகள் திரும்ப பெறப்பட உள்ளது.

இந்நிலையில் இச்சட்டத்தின் மூலம் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆதாயம் பெற்றது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1995ஆம் ஆண்டு கோரக்பூரில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோது அதை மீறியதாக யோகி மீது அப்போது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. 22 ஆண்டுகளாக நிலுவையிலிருந்து இந்த வழக்கிலிருந்து, கடந்த வாரம் அமலான புதிய சட்டத்தின் மூலம் யோகி விடுவிக்கப்பட உள்ளார்.

0 Responses to புதிய சட்டம் இயற்றி வழக்கிலிருந்து விடுதலையாகிறார், உத்தரப்பிரதேச முதல்வர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com