வரப்போகும் சிறீலங்கா அதிபர் தேர்தலில் தமக்கு ஆதரவை வழங்குமாறு சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஆயுததாரிமான பிள்ளையானிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பேச்சாளரும், பிள்ளையானின் இணைப்புச் செயலாளருமான ஆசாத் மௌலானா தெரிவிக்கையில்:
வரப்போகும் சிறீலங்கா அதிபர் தேர்தலில் தமக்கு ஆதரவை வழங்குமாறு சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கேட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி எதிர்வரும் அரச அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கே ஆதரவளிக்கவுள்ளது. எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்,கீழ் போட்டியிடுவது குறி த்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா அரச அதிபர் தேர்தலில் தமக்கு ஆதரவை வழங்குமாறு பிள்ளையானிடம் மகிந்த வலியுறுத்து
பதிந்தவர்:
தம்பியன்
31 October 2009



0 Responses to சிறீலங்கா அரச அதிபர் தேர்தலில் தமக்கு ஆதரவை வழங்குமாறு பிள்ளையானிடம் மகிந்த வலியுறுத்து