சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரமுடைய ஆறாவது அரசதலைவராக தெரிவுசெய்யப்பட்ட மகிந்த ராஜபக்ச தனது வெற்றியை ஏற்றுக்கொண்டு ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் தான் பெற்ற வெற்றி இந்த நாட்டு மக்களின் வெற்றி என்று கூறியுள்ளார்.சிறிலங்காவை கட்டி எழுப்புவதற்கு அனைத்துதரப்பினரையும் தன்னுடன் கைகோர்த்து வருமாறு அழைப்பு விடுத்துள்ள அவர், தான் தற்போது சிறிலங்கா என்ற முழு தேசத்திற்கும் தலைவர் என்றும் தனக்கு வாக்களித்தவர்களுக்கும் முன்னர் வாக்காளிக்காதவர்களுக்கும்கூட தலைவர் என்றும் கூறியுள்ளார்.
வெளிவந்துள்ள தேர்தல் முடிவு நாட்டின் சமநிலையையும் மக்கள் விருப்பத்தையும் தெளிவாக எடுத்துக்காட்டியிருப்பதாகவம் அவர் தெரிவித்துள்ளார்.







0 Responses to இது மக்களின் வெற்றி என்கிறார் அரசதலைவர் மகிந்த (படங்கள்)