வரலாற்றுச் சவாலை எதிர்கொண்டு நிற்கும் ஈழத்தமிழினத்தின் வலுநிலையாக மாறியுள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் செயற்பாடுகளில் வலுவுள்ள சர்வதேச கட்டுமானமாக மாறியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசை அதன் தேர்தலில் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டு பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதினூடாக வலுப்படுத்தலாம் என்பதை கனடிய தமிழர் தேசிய அவைக்கான செயற்குழு வலியுறுத்தி நிற்கின்றது.
மே 2 தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்கையும் தெரிவித்துக் கொள்ளும் கனடிய தமிழர் தேசிய அவைக்கான செயற்குழு, வெற்றி தோல்விகளைக் கடந்து தமிழின செயற்பாட்டில் அவர்களை தொடர்ந்தும் ஈடுபடுத்திக் கொள்ளுமாறும் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறது.
மே 3 முதல் முன்னெடுக்கப்படும் வலிசுமந்த மாதம் நிகழ்வுகளில் அனைத்து தமிழர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அழைக்கும் அதேவேளை கனடிய தமிழர் தேசிய அவைக்கான தேர்தல் குறித்த முழுமையான விபரங்கள் வரும் வாரம் கனடிய தமிழ் மக்களுக்கு அறியத்தரப்படும் எனவும் கனடிய தமிழர் தேசிய அவைக்கான செயற்குழு மேலும் தெரிவித்துள்ளது.



0 Responses to மே 2, தவறாது வாக்களியுங்கள்: கனடிய தேசிய அவைக்கான செயற்குழு அறைகூவல்