Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானியாவில் இரண்டு முக்கிய தேர்தல்கள் நடைபெறுவதால், அவை பற்றி பிரித்தானியத் தமிழர் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசு, மற்றும் பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பிரித்தானியத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தமிழ் மக்கள் இந்தவாரத்தினுள் இரு முக்கியதேர்தல்களை சந்திக்கின்றார்கள்.

நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சு தேர்த‌ல்:

நாடு கடந்த தமிழீழ அரசிற்கானஉறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெறுகின்றது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின்னர் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் தமிழ் மக்களின் அரசியல் வேணவாவையும் புலம் பெயர் தேசங்களில் சனநாயக முறையிலும் இராசதந்திர முறையிலும் பற்றுறுதியுடன் முன்னெடுக்க வேண்டியவர்களாக உள்ளோம்,

இந்த பணியில் நாடுகடந்த அரசும் முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற வகையில் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்கள் இத்தேர்தலில் பங்கேற்று மக்கள் தாம் விரும்பும் தகுதியானவேட்பாளரை தெரிவு செய்யவேண்டுமென பேரவை கேட்டுக் கொள்கின்றது.

பிரித்தானிய‌ பாராளும‌ன்ற‌த் தேர்த‌ல்:

பிரித்தானியஅரசியலில் அண்மைக்காலமாக மிழர்கள் சார்பானகொள்கைகளில் பல சாதகமானமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது.

பிரித்தானியாவின் பெரும் ட்சிகளின் லைவர்கள் உலத் மிழர் பேரவையின் அங்குரார்ப்பவைபத்தில் தோன்றியமையும், பாராளுமன்றவிவாதங்களை நிகழ்த்தி ஈழவிவகாரத்தை ஆராய்ந்தமையும், பிரித்தானியா வாழ் மிழர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கின்றது.

இவ்வாறானநிகழ்வுகளின் பின்னால் மிழ் க்களின் ண்பர்கள் பாராளுமன்றத்தில் டுமையாகஉழைத்திருக்கின்றார்கள். பிரித்தானிய ஆட்சியாளர்களின் த்தினை முழுமையாகவெல்வற்கு நாம் இன்னும் நீண்டதூரம் ணிக்கவேண்டும். அதற்கு எமது ண்பர்கள் பாராளுமன்றம் செல்லவேண்டும்.

யாருக்கு வாக்க‌ளிக்க‌ வேண்டும்?

பேரவை ட்சி சார்பின்றி அனைத்து ட்சிகளோடும் இணைந்து பணியாற்றுகின்றது. அனைத்துக் ட்சிகளிலும் அங்கம் வகிக்கும் எமது நண்பர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாவது எமக்கு மிகப்பெரும் பலத்தினை சேர்க்கும். ஆகவே இதுவரை காலமும் எமக்காககுரல் கொடுத்த‌, எமக்காகஇதசுத்தியோடு உழைத்தஅனைவரும் மீண்டும் பாராளுமன்றம் செல்ல வேண்டும்.

அத்தோடு தமிழ் மக்களுக்காக உழைக்கதிடங்கல்ப்பம் பூண்டுள்ளபுதியண்பர்கள் பலர் இப்பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிற்கின்றனர். இவர்களும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகினால் பிரித்தானிய அரசியலில் தமிழர் சார்பான மேலும் நல்ல மாற்றங்கள் உருவாகும்.

நாம் எப்ப‌டி தேர்த‌லில் உத‌வ‌ முடியும்?

இத்தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்து எமது நண்பர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் பணியை மேற்கொள்ளுமாறு பேரவை கேட்டுக் கொள்கின்றது.

அத்தோடு எமது மக்களின் நண்பர்களின் தேர்தல் பிரச்சாரப் பணியில், பேரவையின் அரசியல் பரப்புரை பிரிவின் ஒருங்கிணைப்பில் பேரவையின் அங்கத்தவர்கள் பெருமளவில் ங்கெடுத்து வருகின்றனர். இறுதி நேரப் பிரச்சாரப் பணியில் பெருமளவிலான உதவியினை வேட்பாளர்கள் நாடி நிற்கின்றனர். ஆகவே தமிழ் மக்கள் அனைவரும் இப்பணியில் இணைந்து கொள்ளுமாறு பேரவை கேட்டுக் கொள்கின்றது.

தேர்தல் ணிகளில் உங்களை இணைத்துக் கொள்ளபேரவையோடு தொடர்பு கொள்ளவும் : தொலைபேசி இலக்கம்: 0208 808 0465

இவ்வாறு பிரித்தானியத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to பிரித்தானிய தமிழர்கள் எதிர்கொள்ளும் தேர்தல்கள் - பிரித்தானியத் தமிழர் பேரவை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com