Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெலிக்கடையில் சரத் கைதி இலக்கம் 0-22032

பதிந்தவர்: தம்பியன் 04 October 2010

விடுதலைப்புலிகளுக்கு எதிராக தமது படைகளை வழிநடத்திச் சென்ற இலங்கையின் யுத்த கதாநாயகன் சரத் பொன்சேகா தற்போது சிறைச்சாலைக்கூடத்தில் சீமெந்துத் தரையில் பாயில் படுத்து உறங்குவதாகவும் சிறைச்சாலைக் கைதிகளின் உடைகளையே அவர் அணிந்திருப்பதாகவும் தெரியவருகின்றது.

மோசடிக் குற்றச்சாட்டுகளில் சிறைத்தண்டனை பெற்ற பொன்சேகா, கடந்த வியாழக்கிழமை முதல் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

"பொன்சேகாவின் கைதி இலக்கம் 0/22032,குற்றவாளிகள் அணியும் ஆடையை இப்போது அவர் அணிந்திருக்கிறார். சீமெந்துத் தரையில் பாயில் உறங்குகிறார். அவருக்கு ஒரேயொரு தலையணை மட்டுமே உள்ளது" என்று சண்டே ரைம்ஸ் பத்திரிகை நேற்று தெரிவித்துள்ளது. அப்பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வியாழக்கிழமை இரவில் முன்னாள் இராணுவத்தளபதி பொன்சேகா வார்ட் "S" சிறைக்கூடத்திற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு அவர் விழித்தெழுந்தார். அவர் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அறையில் மலசலகூடம் இருந்தது. கழிவறை பிளாஷ் சரியாக செயற்படவில்லையென அவர் முறைப்பாடு செய்திருந்தார்.

விடுதிக்கு வெளிப்புறத்தே இருந்த நீர்த்தாங்கிக்கு அவர் செல்ல வேண்டியிருந்தது. அங்கு அவர் வாளியை உபயோகித்து தண்ணீர் அள்ளி கழுவ,குளிக்க வேண்டியிருந்தது. பின்னர் ஒரு கையில் கிண்ணத்தையும் மறு கையில் தட்டையும் ஏந்தியவாறு ஏனைய குற்றவாளிகளுடன் காலை உணவைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றிருந்தார்.

சோறும் தேங்காய்ச்சம்பலும் வழங்கப்பட்டது. மருத்துவர் அவரை பரிசோதித்தார். சிறைச்சாலையிலிருந்த தையல்காரர்கள் அவரின் அளவுக்கு ஜம்பர்களை வழங்குவதற்காக அளவெடுத்தார்கள். மதியநேர உணவுக்காக மீண்டும் கோப்பை,தட்டுடன் அவர் வரிசையில் இணைந்துகொண்டார்.

மதிய உணவாக சோறும் வெள்ளரிக்காய் கறியும் பருப்பும் கீரையும் வழங்கப்பட்டது. அத்துடன், சிறிய துண்டு மீனும் குழம்பும் இருந்தது. உடனடியாக இரண்டு மணியளவில் அவர் தனது சிறைக்கூடத்திற்குத் திரும்பிவிட்டார். பின்னர் வெளியில் சிறிதுநேரம் நின்றிருந்த அவர் இரவு ஏழு மணிக்கு மீண்டும் சிறைக்கு திரும்பிவிட்டார். அந்த நேரம் விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன. அடுத்த நாள் காலை வரை அவர் இருட்டுக்குள் உறங்க வேண்டியிருந்தது.

இது இப்போது பொன்சேகாவின் அன்றாட நடவடிக்கையாக அமைந்துள்ளது. இராணுவத்தை வழிநடத்திய முன்னாள் இராணுவத்தளபதியின் அன்றாட நிகழ்வாக இது அமைந்திருக்கின்றதென்று சண்டே ரைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

1 Response to வெலிக்கடையில் சரத் கைதி இலக்கம் 0-22032

  1. sarath fonseka is hardcore criminal and he should be punished prison for life

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com