பதிந்தவர்:
தம்பியன்
07 October 2010
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு கோரும் மனுவில் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் பிரச்சாரம் இன்று கோட்டையில் ஆரம்பமானது.
ஆனால் இந்த மனுவில் கையெழுத்துப் போடக்கூடாது என்று தெஹியட்டகந்திய போலீசார் மக்களுக்கு தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேற்படி பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்தும்படி பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாக தெஹியட்டஹந்திய அதிகாரிகள் சிலர் நேற்று காலை இந்நிகழ்வு ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இப்பிரச்சாரத்துக்காகக் கட்டப்பட்டிருந்த பதாகைகளைப் போலீசார் அகற்றினர்.
இப்பதாகைகளை அகற்ற அனுமதிக்காவிட்டால்,
நிகழ்வு ஏற்பாட்டாளர்களைத் தாம் கைது செய்ய வேண்டிவரும் என்றும் போலீஸ் எச்சரித்துள்ளதாம்.
மேலும் எமது தளங்கள்:ஈழத்து காணொளிகள்ஆய்வுகள், கட்டுரைகள்
0 Responses to பொன்சேகாவுக்காக கையெழுத்துப் போடும் மக்களை போலீஸ் தடுப்பு!