Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனரல் சரத் பொன்சேகா கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிங்க படைப் பிரிவை (றெஜிமென்ட்) கலைப்பது குறித்து பாதுகாப்புச் செயலாளர் கவனம் செலுத்தி வருவதாக இராணுவத் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனரல் பொன்சேகாவின் ஆரம்ப இராணுவப் பிரிவான சிங்க படைப் பிரிவு குறித்து சந்தேகத்தோடு செயல்பட்டுவரும் பாதுகாப்பு அமைச்சு அந்தப் பிரிவைச் சேர்ந்த எந்த அதிகாரிகளையும் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரின் பாதுகாப்புப் பணிகளில் பயன்படுத்துவதில்லை.

அந்தப் படைப் பிரிவில் பணியாற்றிய உயர் அதிகாரிகள் சிலர் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன், அம்பேபுஸ்ஸ சிங்க படைப் பிரிவின் முகாமில் வைக்கப்பட்டுள்ள சிங்கத்தை தெஹிவளை வனவிலங்கு பங்காவிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to பொன்சேகாவின் "சிங்க றெஜிமென்" படையை கலைத்துவிட கோத்தபாய முடிவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com