Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் ஆசனத்தை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற பதில் செயலாளர்நாயகம் மற்றும் தேர்தல் ஆணையாளர் ஆகியோரினால் லக்ஷ்மன் நிபுன ஆராச்சியின் பெயர் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.

ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற ஆசனத்தைப் பெற்றுக் கொள்ளும் உத்தேசம் ஒருபோதும் கிடையாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெற்றிடமாகியுள்ள ஆசனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென ஜே.வி.பி அறிவித்துள்ளது.

இராணுவ நீதிமன்றில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் சரத் பொன்சேகாவுக்கு 30 மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாதத்திற்கு மேல் தண்டனை அனுபவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரின் பதவி ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிடமாகும் நாடாளுமன்ற ஆசனத்திற்கு அடுத்த அதிகூடிய விருப்பு வாக்கு பெற்ற கட்சி உறுப்பினர் தெரிவு செய்யப்படுவது வழமையான நடைமுறையாகும்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to பொன்சேகாவின் ஆசனத்தை ஏற்கப் போவதில்லை: லக்ஷ்மன் நிபுன ஆராச்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com